tamilnadu

img

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லி,மார்ச் 4- 10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என்று மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்தநிலையில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடி விற்கு பிரதமர் நரேந்திர மோடி யின் தலைமையிலான மத்திய அமை ச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதனையடுத்து  2020-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இது  அமலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் 10 பொதுத் துறை வங்கிகள் நான்காக இணைக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது.